வில்லேர் உழவர்
பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர்
பகை (திருக்குறள் -872)
என்பார்
வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட
உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும்.
மூன்று
வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம். ஆனால்
வாழ்நாள் முழுக்க என்ன பேசவேண்டும், எங்கு
பேசவேண்டும், எவ்வளவு பேசவேண்டும்
என்பதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதனை
அறிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பது பழமொழி