வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 6 ஜூலை, 2024

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - ப.ஜீவானந்தம்


       ப.ஜீவானந்தம் அவர்கள் காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, நாத்திகராக, தமிழ்ப் பற்றாளராகபொதுவுடைமை இயக்கத் தலைவராக மக்கள் மனதில் நிலைத்தவர். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவானந்தம் அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை  என்ற இவரது கவிதைக்குச் செல்லும் முன், வள்ளுவர், பாரதியார், வள்ளலார், திருமூலர் ஆகியோரின் சிந்தனைகளை ஒப்புநோக்கிய பின் செல்வோம்

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராதியல்வது நாடு

பசி, நோய், பகை இல்லாததே நாடு 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றியான் 

பிச்சைக்காரர் வாழும் நாட்டைப் படைத்தவன், கெட்டு ஒழியட்டும்  என்று சினம் கொண்டார் திருவள்ளுவர்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதி. 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் இராமலிங்க வள்ளலார். 

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடும் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று திருமூலர் கூறுவார்..

ப.ஜீவானந்தம் அவர்களின் கவிதைக்குச் செல்வோம் 

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - அதன்

பட்டினி அழுகை கேட்டதில்லை

இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்

இட்டு வணங்குகிறார் முக்திக் கென்றே.

 சாமியைக் கல் என்று சொல்லிவிட்டாரே என்று ஜீவானந்தம் அவர்கள் மீது கோபப்படுவதைவிட