புகழ்
பெற வாழவேண்டும் என்பது மனித இயல்பு.
ஈதல்
இசைபட வாழ்தல், தோன்றின் புகழொடு தோன்றுக என்றெல்லாம் திருவள்ளுவர் உரைத்துள்ளார்.
என்றாலும்
எல்லோரும் புகழ்பெற வாழ்வதில்லை.
புகழைத்
தேடிச்செல்வோர் பலர், ஆனால் புகழ் சிலரை மட்டுமே தேடிச்செல்வதுண்டு.
அவ்வாறு
புகழ் பெறாதவர்கள் தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதுண்டு.
தற்புகழ்ச்சி,
தற்பெருமை, சுயதம்பட்டம் என பலவாறு அழைத்தாலும்.
சில
நேரங்களில் இதனால் நன்மையும் பலநேரங்களில் தீமையும் விளைகிறது.
உடையது விளம்பேல் என்பது ஔவையார் வாக்கு
கற்க வேண்டிய நூல்களைக் கற்று அறிவுடையவர்கள் கண்ட அடக்கமே உண்மையான அடக்கமாகும். கற்று அறியாதவர்களோ, தங்களுடைய அறியாமையான தன்மையை மறந்துவிட்டுத் தம்மைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். நீர் நிறைந்த குடம் தளும்பாது; குறை குடமே தளும்பும் என உரைக்கிறது பழமாழி நானூறு.





