சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கவிஞர்,
மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் என
பன்முகத் திறன்கொண்டவர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்
தலைவராகப் பணியாற்றியவர். அக்கினி சாட்சி நாவலுக்காகவும், ஒரு கிராமத்து
நதி என்ற கவிதை நூலுக்காகவும் என இருமுறை
சாகித்திய அகாதமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது,
கபிலர் விருது,
எனப் பல விருதுகள் பெற்றவர்.
பண்டைய சேரநாடே
இன்றைய கேரளம். கேரளம்,
தமிழகத்துக்குப் பலவளங்களைத் தந்துள்ளது. தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான உறவை நினைவுகொள்வதாகவும், கேரளத்தின்
கொடைகளைப் பட்டியலிடுவதாகவும் இக்கவிதை அமைகிறது. காற்றுக்கு ஏது மொழி. இங்கு மலையாளக்
காற்று என்பது குறியீடாக அமைகிறது.
‘’காற்றே வா
மலையாளக் காற்றே வா
இளங்காலைப் போதில்
தெருவே மணக்கவரும் பூக்காரிபோல்
வாசனை நடைபோட்டு வா
இளம்காலைப் பொழுதில் தெருவே மணம் வீசும்படி பூக்களைச் சுமந்து வருகிற
பூக்காரி போல நல்ல வாசனையோடு நடைபோட்டு வா’ என்று மலையாள இலக்கியத்தை, நட்பை, வளத்தை வரவேற்கிறார்.