வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 7 அக்டோபர், 2024

புகழ்I வானொலி உரை



ஒருவன் எவ்வளவு உயராமானவன் என்பதைவிட – அவன்

எவ்வளவு உயர்வானவன் என்பதையே காலம் திரும்பிப்பார்க்கிறது.

ஒருவன் எவ்வளவு அழகானவன் என்தைவிட – அவன்

எவ்வளவு அழகான பண்புகளைக்கொண்டவன் என்பதையே இவ்வுலகம் எண்ணிப்பார்க்கிறது.

 ஒருவன் வாழும்போது எவ்வளவோ இடங்களை ஆளுமை என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அதையெல்லாம்விட.... அவன் இறந்தபின்...

 எவ்வளவு மனங்களில்..எவ்வளவு இடங்களை...தன் அன்பால்ஆளுமையால் ஆக்கிரமித்திருந்தான் என்பதே நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான பண்பாக அமைகிறது..

 

வியாழன், 3 அக்டோபர், 2024

சொல்லுக சொல்லை...

 


 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை (திருக்குறள் -872)

என்பார் வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும்.

மூன்று வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் வாழ்நாள் முழுக்க என்ன பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், எவ்வளவு பேசவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதனை அறிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பது பழமொழி

திங்கள், 30 செப்டம்பர், 2024

அறிவெனப்படுவது…


 அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல் என உரைக்கிறது கலித்தொகை அறிவில்லாதவர்களின் சொல்லைப் பொறுத்துக்கொள்ளுவதே அறிவுடைமை என்பது இதன் பொருள்.

கல்வி அறிவு, கேள்வி அறிவு, அனுபவ அறிவு,இயற்கை அறிவு, நுண்ணறிவு, என அறிவு பல வகைப்பட்டதாக ஒவ்வொரு துறைசார்ந்தும் பாகுபடுத்தப்படுகிறது.

இப்பிறவியில் கற்பது ஏழு பிறவிக்கும் உதவும் என்பது வள்ளுவர் வாக்கு.     

திருக்குறளில் அறிவுடைமை என்ற அதிகாரத்தில் மட்டுமின்றிப் பல குறட்பாக்களில் அறிவைப் பற்றி திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.

 

அறிவு என்றால் என்ன? அறிவை எதற்கு, எங்கு, எப்படிப் பயன்படுத்தவேண்டும்? என்று வள்ளுவரைக் கேட்டால்..

 

புதன், 11 செப்டம்பர், 2024

தேமதுரத் தமிழோசை - பாரதியார் நினைவுநாள்


மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. தமிழ் வளர்த்த சான்றோர் பெருமக்களுள் மகாகவி பாரதியார் குறிப்பிடத்தக்கவராவர்.

நல்லதோர் வீணை செய்தே அதை

நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்