இன்னா நாற்பது என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.
இன்னா என்ற சொல்லுக்கு, துன்பம்,
தீங்கு, வெறுப்பு, இகழ்ச்சி,
அல்லது விரும்பத்தகாதவை
விழுமியம் – கூடா நீதி
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் வாழ்தல் இன்னாதது.
நீண்ட தொலைவு நீரை மிதவை இல்லாமல் நீந்துதல் துன்பம்.
’கடுகடு’வெனப் பேசுபவர் தொடர்பு துன்பம்.
தட்டுத் தடுமாறிக்கொண்டு வாழும் உயிருக்குத் துன்பம்.



