வாழ்க்கையில் வெற்றிபெறத்
தேவையான பண்புகளுள் குறிப்பிடத்தக்க நற்பண்பு ஊக்கம் ஆகும்.
சோம்பலின்
இழிவைப் பற்றி மடியின்மை அதிகாரத்திலும், முயற்சியின்
பெருமையை ஆள்வினையுடைமை அதிகாரத்திலும் மன உறுதி பற்றி வினைத் திட்பம் அதிகாரத்திலும்
பேசிய திருவள்ளுவர் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஊக்கத்தின் சிறப்பியல்புகளைப் பேசியுள்ளார்.
ஊக்கம் என்பது ஒருவருக்கு பல நிலைகளில்
ஏற்படலாம். பட்டம் உயரே பறப்பதற்கு காற்று மிகவும்
தேவையாகிறது. அதுபோல மனிதர்கள் உயர ஊக்கம் தேவைப்படுகிறது
ஊக்கத்தை மனதின் எழுச்சி,
புத்துணர்ச்சி, உற்சாகம் என பலவாறு அழைக்கிறோம்..
ஊக்கத்தை உள் ஊக்கம்,
புற ஊக்கம் எனப் பிரிக்கலாம்.
உள் ஊக்கமானது மனதளவில் தோன்றக்கூடியது..
புற ஊக்கம் நம்மைச் சுற்றியுள்ளவர்களாலும்
சூழல்களாலும் தோன்றுகிறது.
ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவையர். ஊக்கத்தை எப்போதும் கைவிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள் ஆனால் ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல் எனச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு மது ஊக்கம் தருகிறது என்று நம்புகிறார்கள். மேலும் மதுவைப் போல பல போதைப் பொருள்கள் ஊக்கம் தருவதாக நம்புவோர் பலர் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் கூட விளையாட்டு வீரர்கள், ஊக்கம் தரும் உணவுப்பொருள்களோ, போதைப் பொருள்களோ பயன்படுத்தியுள்ளனரா என சோதிப்பது வழக்கமாக உள்ளது.
ஊக்கம் ஒருவருக்கு எப்படித் தோன்றுகிறது..