வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

மலையாளக் காற்று - சிற்பி

 


    சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கவிஞர்
, மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் என பன்முகத் திறன்கொண்டவர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அக்கினி சாட்சி நாவலுக்காகவும், ஒரு கிராமத்து நதி என்ற கவிதை நூலுக்காகவும் என இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது, கபிலர் விருது, எனப் பல விருதுகள் பெற்றவர்.

பண்டைய சேரநாடே இன்றைய கேரளம். கேரளம், தமிழகத்துக்குப் பலவளங்களைத் தந்துள்ளது. தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான உறவை நினைவுகொள்வதாகவும், கேரளத்தின் கொடைகளைப் பட்டியலிடுவதாகவும் இக்கவிதை அமைகிறது. காற்றுக்கு ஏது மொழி. இங்கு மலையாளக் காற்று என்பது குறியீடாக அமைகிறது.

‘’காற்றே வா

மலையாளக் காற்றே வா

இளங்காலைப் போதில்

தெருவே மணக்கவரும் பூக்காரிபோல்

வாசனை நடைபோட்டு வா

இளம்காலைப் பொழுதில் தெருவே மணம் வீசும்படி பூக்களைச் சுமந்து வருகிற பூக்காரி போல  நல்ல வாசனையோடு நடைபோட்டு வா’ என்று மலையாள இலக்கியத்தை, நட்பை, வளத்தை வரவேற்கிறார்.

சனி, 9 ஆகஸ்ட், 2025

மனத்தூய்மை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்  என்கிறது உலகநீதி

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா என்றார் அகத்தியர்

சிந்தை தெளிவாக்கு என்று பாடிய பாரதி

பேயாய் உழலுஞ் சிறுமனமே!

பேணாய் என்சொல் இன்று முதல் நீயா ஒன்றும் நாடாதே

நினது தலைவன் யானேகாண் என்று பாடியுள்ளார்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

வாய்ப்பு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


வாய்ப்பு என்றவுடன் பலருக்கும் வேலை, வாய்ப்பு தொழில் வாய்ப்பு தான் நினைவுக்கு வரும் ஆனால் இவை இரண்டையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன…

காலையில் சூரியன் தோன்றுவதையும் மாலையில் மறைவதையும் பார்க்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். நிலவை, நட்சத்திரங்களை, வானவில்லை இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளையும் காண்பதற்காகக் காத்திருப்பவர்கள் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்களில் சிலர் கவிஞராகலாம், ஓவியராகலாம், நிழற்படக்கலைஞராகலாம்.

பொழுதுபோக்குக்காக விளையாடுவோர் பலர். சிலர் விளையாட்டுதான் தம் வாழ்க்கை என்று அதில் உள்ள வாய்ப்பை உணர்ந்து விளையாட்டில் புகழ்பெறுகிறார்கள்.

பொருள் தேடுகிறேன், பிள்ளைகளின் கனவுகளுக்காக உழைக்கிறேன், அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்கிறேன் என்று பொருள் தேடுவோரில்

எத்தனை பேருக்கு பிள்ளைகளோடு நேரம் ஒதுக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு நம்மைச் சுற்றி பல வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக மனிதர்களை, வாய்ப்பில்லை என வாடுவோர், வாய்ப்புகளைத் தேடுவோர், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வோர் என மூன்று வகையாகப் பகுக்கலாம்.

 

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

மெய்ப்பொருள் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


அறிவுடைமை அதிகாரத்தில் திருவள்ளுவர்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.     ( 423)
யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

என்றும்,

மெய்யுணர்தல் அதிகாரத்தில்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.  (355)

எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்பதே அறிவு

என்றும் உரைத்துள்ளார்.

இவ்விரு குறள்களையும் ஆழ்ந்து நோக்கினால் செவிகளால் கேட்பது, கண்களால் காண்பது ஆகிய இரண்டும் உண்மைதானா என ஆராய்ந்து அறியவேண்டும் என்ற கருத்து தோன்றுகிறது.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

என்ற பாரதியார் பாடலும் மெய்ப்பொருள் குறித்த தேடலாகவே உள்ளது.

பொருள் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.